சென்னை: நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை போனில் பேசிய மர்ம நபர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீடு மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி இணைப்பை துண்டித்தார். உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் இருவரது வீட்டிற்கும் சென்று சோதனை செய்தனர்.