சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 17ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்ந்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.