கோவில்பட்டி: கயத்தாறு அருகே முயல் வேட்டைக்கு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக கோவில்பட்டி வனச்சரகர் சிவராமுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனவர்கள் நாகராஜன், பாலசுப்பிரமணியன், வன பாதுகாப்பாளர்கள் சுதாகர், சுகுமார், பேச்சிமுத்து, அருண்ஆனந்த், குமார் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அய்யனார்ஊத்தில் இருந்து மானாங்காத்தான் இடையே 10 பேர் கொண்ட கும்பல், முயல் வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்கள், கன்னிகள் மற்றும் கம்புகளுடன் பதுங்கி இருந்ததை கண்டறிந்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.