திருமலை, :பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ அதிகாரிகள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், நாளை மாலை 3.02 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.