புதிய பாதிப்புகளை விட குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகம் : இந்தியாவில் கொரோனா நோயில் குணமடைந்தோர் விகிதம் 92% -ஐ தாண்டியது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.24 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 84 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 47,638 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 84,11,724 ஆக உயர்ந்தது.

* புதிதாக 670 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,24,985 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 54,157 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 77,65,966 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,20,773 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 92.32% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.49% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.19% ஆக குறைந்துள்ளது.

Related Stories: