பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி, சொத்து வரி மற்றும் கட்டிட அனுமதி பெறும் பொதுமக்களிடம், நகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 11 அதிகாரிகள் நேற்று மாலை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ முடியாத வகையில் பிரதான கதவை மூடினர். பின்னர், அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளின் அறைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.