தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 80,192 பரிசோதனை செய்யப்பட்டதில் 2,348 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் இது 7,36,777 ஆக உயர்ந்துள்ளது. நேற்று குணமடைந்த 2,413 பேரை சேர்த்து மாநிலத்தில் 7,06,444 பேர் வீடு திரும்பியுள்ளனர். 19,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 28 பேர் இறந்தனர். இதனால் மரணங்களின் எண்ணிக்கை 11,272 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: