சென்னை: திருவொற்றியூரில் ரூ242 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய மீன்படி துறைமுகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுவருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் தலைமை செயலாளர், மீன்வளத்துறை, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கவும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் திருவொற்றியூரில் ரூ242 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
திருவொற்றியூர் புதிய மீன்படி துறைமுகம் விவகாரம்: மீன்வளத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- திருவோட்டியூர் புதிய மீன்வள துறைமுக வெளியீடு: மீன்வளத் துறை
- மாசு கட்டுப்பாட்டு வாரியம் பசுமை தீர்ப்பாயம்