மேல்மருவத்தூரில் எரிந்து கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: கொலையா? விசாரணை

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் பஸ் நிறுத்தம் அருகே, அச்சிறுப்பாக்கம் செல்லும் வழியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ரயில்வே தண்டவாளம் அருகில், உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் நேற்று காலை ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்து மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தவருக்கு 25 வயது இருக்கலாம் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு பகுதியில் கொலை செய்து, இங்கு கொண்டு வந்து சடலத்தை வீசி சென்றனரா, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தொழில் போட்டியா, கள்ளக்காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: