கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் குழந்தையுடன் அக்காவை கொலை செய்த தங்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(46). இவருக்கு சுமதி(21), சுஜாதா(20) என இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சில நாட்களாக இரண்டு மகள்களும் தாய் வீட்டில் வசித்து வந்தனர்.  கடந்த மாதம் 31ம் தேதி தாய் செல்வி, தந்தை சின்னசாமி ஆகிய இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். சுஜாதா வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார். திடீரென சுமதி தன்னைதானே கொடுவாளால் கை, தலை பகுதியில் வெட்டி கொண்டும், பின்னர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தை நிதியுடன் சேர்த்து அணைத்து தீவைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரும் உயிரிழந்தனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது சுமதியின் கணவர் இளையராஜா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுமதி, நிதி இறப்பில் சந்தேகம் உள்ளது என்றுகூறி அசகளத்தூர் மெயின் ரோட்டில் உடல்களை வைத்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில், போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது தவறு யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். அதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்று உடல்களை அடக்கம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் சுமதியின் தங்கை சுஜாதாவிடம் விசாரித்தனர். அப்போது, அக்காவை கொடுவாளால் வெட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தாய், குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார். இதன்பின்,சுஜாதாவை போலீசார் கைது செய்தனர்.  3 மாத ஆண் குழந்தையுடன் அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: