ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.20 முதல் 18.11.20 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 425 6151 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் பல்வேறு குழுக்கள் இணைப் போக்குவரத்து ஆணையர், துணைப் போக்குவரத்து ஆணையர் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு செயலாக்கப் பிரிவின் மூலம் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் சிரமமின்றியும் பாதுகாப்பான பயணத்திற்கும் போக்குவரத்து துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: