மீனம்பாக்கம்: பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஒரு விமானம் மற்றும் பெங்களூரில் இருந்து வர வேண்டிய 2 விமானங்கள் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை 7.20 மணிக்கு பெங்களூர் செல்ல வேண்டிய தனியார் விமானம் 56 பயணிகளுடன் புறப்பட தயாரானது. ஆனால் பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படவில்லை. இதையடுத்து, வானிலை சீரடைந்து விட்டதாக தகவல் கிடைத்ததும் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை 8.20 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அதே போல பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்களும் மோசமான வானிலையால் தாமதமாக வந்தன.