சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணா மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பத்மபூஷன், பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலைசிகாமணி, சங்கீத கலாநிதி விருது என இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்றவர் கிருஷ்ணா. கர்நாடக இசைத் துறையில் குறிப்பாக வயலின் இசைக் கலைஞராக அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும். சென்னை இசைக்கல்லூரி பேராசிரியராகவும், டெல்லி பல்கலைகழகத்தின் இசை மற்றும் கவின் கலை பள்ளி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டின் ராஜ்பவனின் உயர்ந்த விருதையும் அவருக்கு அளித்துள்ளேன்.