சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு மரணம் அடைந்ததை தொடர்ந்து, பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 13ம் தேதியில் இருந்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு காலமானார். இதையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல் தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.