சென்னை: கோ -ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக மைதிலி ராஜேந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர், பொறுப்பேற்றவுடன் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனையை பெருக்க தேவையான நடவடிக்கை எடுக்க என்ன செய்யலாம் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பேரில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள விற்பனை நிலையங்களில் ரூ.3 கோடியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு ரக போர்வைகள் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த போர்வை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டன.