சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. நேற்று சர்தார் வல்லபாய் படேலின் 145வது பிறந்தநாளை முன்னிட்டுரயில்வே பாதுகாப்புப்படை சார்பில் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டது.