அமராவதி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர், மகன் பலி

சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கனியூரை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (42). இதய சிகிச்சை மருத்துவ நிபுணரான இவர், சென்னையில் குடும்பத்துடன் தங்கி,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று குடும்ப விழாவில் பங்கேற்க தனது மகள் நிகா (14), மகன் சர்வேஸ் ராஜா (11) ஆகியோருடன் சொந்த ஊர் வந்தார். பின்னர், கடத்தூர் அருகே அமராவதி ஆற்றில் குளித்துள்ளார். அங்கு, மகன் சர்வேஸ் ராஜா ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். மகனை காப்பாற்ற முயன்ற ஜோதிலிங்கமும் நீரில் மூழ்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தந்தை, மகனின் உடலை சடலமாக மீட்டனர்.

Related Stories: