மீட்பு விமானத்தில் 20 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு மீட்பு விமானம் 86 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 2 பயணிகள், தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, அவசர அவசரமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனர். இவர்களின் நடவடிக்கை  அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், இ-பாஸ் கவுன்டரில் வரிசையில் நின்ற இருவரையும் மீண்டும் சுங்கத்துறை அலுவலகம் அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது அவர்களின் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து 375 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 20 லட்சம். இருவரையும்  சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: