எஸ்.வி.சேகர், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை : திருமாவளவன் தாக்கு!!

சென்னை : பாஜக வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி வரும் பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகர், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, என்று தெரிவித்தார். 

Related Stories: