அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எப். பயிற்சி பள்ளிக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பயிற்சியாளர்கள் வந்தனர். ஏற்கனவே 22 பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: