சென்னை: தாய்பால் மூலம் 99 சதவீதம் கொரோனா தொற்று பரவாது என்று எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட தயார்மார்கள் குழந்தைகளுக்கு தாய்பால் அளிப்பதன் மூலம் தொற்று பரவுகிறதா என்பது தொடர்பான ஆய்வு கடந்த ஜூன் மாதம் முதல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. இதன்படி தற்போது வரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 600 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.