வாகன விபத்தில் வாலிபர் பலி

கூடுவாஞ்சேரி:  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, அத்திபட்டி கிராமம், குளத்து தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26). சென்னை அடுத்த  பள்ளிக்கரணையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பீல்டு இன்ஜினியராக பணியாற்றி வந்தார். ஆயுதபூஜைக்காக சொந்த ஊர் சென்ற  அஜித்குமார், விடுமுறை முடிந்து தனது பைக்கில் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை சிக்னல் அருகே  சென்றபோது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதி விட்டு தப்பியது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்படி கூடுவாஞ்சேரி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: