சென்னை: நவீன ரக இ.ஓ.எஸ்-01 புவிகண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் தடைபட்டது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி ராக்கெட் ஏவுதல் பணிகள் அனைத்தும் சுணக்கம் அடைந்தது. இந்தநிலையில், நவம்பர் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி -சி49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. அன்றைய தினம் மாலை 3 மணி 02 நிமிடத்தில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.