பிஎஸ்என்எல் குறைதீர்ப்பு கூட்டம்

சென்னை: பிஎஸ்என்எல் சென்னை நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி வெளியிட்டுள்ள செய்தி: 29ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி தொலைபேசி, பிராட்பேன்ட் செல்லிடப்பேசி, லீஸ் லைன் உள்ளிட்ட சேவைகள் தொடர்பாகவும், நீண்ட நாள்கள் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். உடனடியாக தீர்க்கப்படாத குறைகளுக்கு 10 நாள்களுக்குள் தீர்வு காணப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொலைபேசி மூலம் கூட்டம் நடத்தப்படும். எனவே வாடிக்கையாளர்கள் 044-2643 3500 என்ற எண்ணிலும், 9445018440 என்ற கைபேசி எண் மூலம் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் மூலமாகவும் bsnlchnoh@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

Related Stories: