சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட்ட துணைத்தேர்வுகளின் ேதர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்கள் இன்று காலை 11 மணி முதல், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியோர் இன்று மதியம் 2 மணி முதல், பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதியோர் நாளை காலை 11 மணி முதல் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டல்: மேற்கண்ட துணைத் தேர்வுக்கான மறுகூட்டல் செய்ய விரும்புவோர் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நவம்பர் 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.