நெல்லை: நெல்ைல மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் நெல் நடவுக்கான முன் பணிகளை தொடங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மட்டும் ஓரளவு மழை இருந்தது. இதனால் சில பகுதிகளில் மட்டும் வழக்கமான நெல் நடவு பணிகள் நடந்தன. ஆனால் பெரும்பாலான நிலங்கள், காய்ந்தே கிடக்கின்றன. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் கடந்த ஜூன் 1ம் தேதி கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. வாழை பயிர் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டும் தாமதமாக சில கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர், சில குளங்கள் நிரம்பவும், கால்நடைகளின் குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவியது.