சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி: 9 பேர் படுகாயம்

சென்னை:  சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த 11 பேர் நேற்று முன்தினம் இரவு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு காரில் திண்டுக்கல்  மாவட்டம் வத்தலகுண்டுக்கு புறப்பட்டனர். நேற்று காலை 7 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் அருகே சென்றபோது,  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.  இதில், குமார் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே  இறந்தார். ராஜா (எ) ஜான் (30),  வனம்பாள் (53), சோலைராஜ் (58), மகேந்திரன் (44), அவரது மனைவி மலர்விழி (31),  சுபேந்திரன் (36), விக்னேஷ்  (20) உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ராஜா (எ) ஜான்  வழியிலேயே  இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: