அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு 11 மணிக்கு மேல் வாகனங்களில் வியாபாரிகள் வந்து காய்கறி வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செல்ல ஒருவழிப் பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. தினசரி 2,500 வாகனங்கள் இந்த ஒருவழிப் பாதைவழியாக செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் அதனை உள்ளே அனுமதிக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள்,அங்கிருந்த சிஎம்டிஏ பெண் அதிகாரி கல்பனாவை முற்றுகையிட்டனர்.