சென்னை: தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அரசின் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
ஆனால், பார்களை திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பார்கள் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று சற்று அதிகரித்து வந்ததால் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு அனுமதி தரவில்லை.