சென்னை: தமிழக அரசு அலுவலகங்கள் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இங்கும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு, 100 சதவீத ஊழியர்களுடன் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழக அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டது.