சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. கொரோனா சிகிச்சை பணியில் முன் களப்பணியாளராக ஈடுபட்ட அவர், கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.