செய்யாறு: செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியதில் இடிந்து சேதமான யாழி சிற்பம் சீரமைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூர் பகுதியில் உள்ளது பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில். இக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இங்குள்ள ஆண் பனை, பெண் பனையாக மாறி, குலை ஈன்ற வரலாற்று சிறப்பு மிக்கது. இந்நிலையில், செய்யாறில் கடந்த 22ம் தேதி இரவு 11 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் ராஜகோபுரத்தின் மேற்புறம் ஒரு பகுதி இடிந்தது.