பதிவுத்துறையில் டிஐஜி, ஏஐஜி, டிஆர்., பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பதிவுத்துறையில் டிஐஜி, ஏஐஜி, டிஆர்., பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் 4 டிஐஜிக்கள், 1  ஏஐஜி, 5 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மண்டல  டிஐஜி பிரபாகர் சென்னை மண்டல டிஐஜி, சென்னை மண்டல டிஐஜி ஜனார்த்தனன் வேலூர் மண்டல டிஐஜி, கடலூர் மண்டல டிஐஜி அருள்சாமி சேலம்  மண்டல டிஐஜி, சேலம் மண்டல டிஐஜி ஆனந்த் கடலூர் மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட பதிவாளர் சின்னராஜ்  ஏஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் நிர்வாகம் (ஏஐஜி அந்தஸ்து) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று சென்னை வடக்கு மாவட்ட பதிவாளர் (தணிக்கை) மணி  சென்னை ஐஜி அலுவலகம் (ஆய்வு), அரியலூர் மாவட்ட பதிவாளர் உமா  தேவி (தணிக்கை) திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் அந்தஸ்து), சிவகங்கை மாவட்ட பதிவாளர் தணிக்கை பாஸ்கரன்  கரூர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), ராயபுரம் சார்பதிவாளர் லட்சுமி பிரியா வில்லிவாக்கம் சார்பதிவாளர் (மாவட்ட பதிவாளர் அந்தஸ்து) சென்னை  சென்ட்ரல் மாவட்ட பதிவாளர் தணிக்கை குமரேசன் புரசைவாக்கம் சார்பதிவாளர் (மாவட்டபதிவாளர் அந்தஸ்து), மாவட்ட பதிவாளர் தில்லைக்கரசி  திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: