சென்னை: வீரத்தமிழர்களான பெரிய மருது, சின்ன மருதுவின் நினைவு தினத்தில் அவர்களை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, இன்னுயிர் நீத்த மருதுபாண்டியரின் நினைவு தினத்தில் அவர்கள் வீரத்தை போற்றுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.