மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். இவர் கொரோனா தொற்றுக்காலத்தில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சமீபத்தில் இவருக்கு திடீரென்று உடல் சோர்வு ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை, கொரோனா தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து, மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.