தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பஸ்கள்: எம்.டி.சி அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்றுவர வார இறுதி நாட்களில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கணேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராயநகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக வார இறுதி நாட்களான (சனி, ஞாயிறு) 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், 30ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரையும், நவம்பர் 7 மற்றும் 8ம் தேதி ஆகிய ஏழு நாட்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் தீபாவளி சிறப்பு பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

Related Stories: