சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில், பஸ்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆயுதபூஜை நாளை (25ம் தேதி) வருகிறது. அதற்கு அடுத்தநாள் விஜயதசமி, முந்தைய நாளான இன்றும் விடுமுறையாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக நேற்று இரவே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டனர். தெற்கு ரயில்வே 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நேற்று மாலை முதல் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்தனர்.