கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு!: திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருவள்ளூர்: திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதி மக்களுக்கு ஆட்சியர் மகேஸ்வரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் 900 கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: