ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கில் இருந்து ஆனந்தூர் செல்லும் சாலை கல்வெட்டு பாலம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சரியான மாற்று பாதை அமைத்து கொடுக்காமல் வாகன ஒட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் விலக்கில் இருந்து கூடலுார், ஆய்ங்குடி வழியாக ஆனந்தூர் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை சேதமடைந்தை தொடர்ந்து தற்போது புதிதாக கல்வெட்டு பாலம் மற்றும் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.