தண்டையார்பேட்டை: சென்னை நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக மாநகர கமிஷனருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று தலைமை செயலகம் அருகில் கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண்பிரசாத்(28), தலைமை செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி ரமேஷ்(40), ஆட்டோ டிரைவர் பிரேம்குமார்(26) மற்றும் ஒருவர் என தெரியவந்தது.