அம்பத்தூர்: பாடி ஒலிம்பிக் காலனியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு பாடி கலைவாணர் நகர் சுரேஷ்(38), முனீஸ்வரன் கோயில் தெரு அக்பர்(46), பொன்னியம்மன் கோயில் தெரு முபாரக்(32), ஜெகதாம்பிகை நகர் முகமது கபீர்(32), சக்தி நகர் நிஜாம் ராஜா(38) ஆகியோர் 1,252 கிராம் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.24.77 லட்சத்தை பெற்று சென்றனர். புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் முகமது கபீர் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் அன்சாரியை தேடுகின்றனர்.