புதுடெல்லி: கடந்தாண்டு நடந்த சைபர் குற்றங்களால் நாடு முழுவதும் ரூ. 1.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் டாக்டர் ராஜேஷ் பந்த் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் கடந்த 2019ல் நடந்த சைபர் குற்றங்களால் ரூ.1.25 லட்சம் கோடி இழப்ப ஏற்பட்டுள்ளது. நாடு ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கினால், சைபர் அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும்.