துபாயில் இறந்தவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை: முதல்வருக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி

தஞ்சாவூர்: துபாயில் உயிரிழந்த தஞ்சையை சேர்ந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூரை அடுத்த கொ.வல்லுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இறந்தவரின் உடலை மீட்டு விரைவாக கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்தார். இதனை அடுத்து சரவணன் உடல் விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சொந்த கிராமத்தில் இறுதி சடங்கை செய்த உறவினர்கள் தமிழக முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Related Stories: