தஞ்சாவூர்: துபாயில் உயிரிழந்த தஞ்சையை சேர்ந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூரை அடுத்த கொ.வல்லுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.