அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஆளுநர்

சென்னை : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கேட்டுள்ளார்.டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்கள் கருத்துக்காக ஆளுநர் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: