ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் கரடி கடித்ததில் மீனவர் ரசூல் என்பவர் படுகாயம் அடைந்தார். விருந்தினர் மாளிகை அருகே சென்ற மீனவர் ரசூலை கை, கால் உள்ளிட்ட இடங்களில் கரடி கடித்து குதறியது. கரடியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் ராமச்சந்திரன் என்பவர் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

Related Stories: