திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்ட அறிக்கை: நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு தொடர் மழை இருப்பின் இந்த தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று காலை நல்லாட்டூர் அணைக்கு வந்து சேரும்.