பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தரைப்பால பணிகளை பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜனகராஜகுப்பம் ஊராட்சி தியாகாபுரம் பகுதியில் கால்வாய்க்கு இடையில் நெடுஞ்சாலை துறை சார்பில் 45 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆர்.கே.பேட்டையிலிருந்து அம்மையார்குப்பம் வழியாக பாலாபுரம், கதனநகரம், மகன்காளிகாபுரம், ஜனகராஜகுப்பம், தாமனேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எளிதாக சென்று வர முடியும். இதனால், கிராம மக்களின் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.