போரூர் வீட்டில் திருடிய கொள்ளையன் அயர்லாந்து சிசிடிவி பதிவில் சிக்கினான்

சென்னை: போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தர வள்ளி (67), வீட்டில் தனியாக  வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள  மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது மகன் அருள்முருகன் அயர்லாந்து நாட்டில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தாயின் பாதுகாப்பிற்காக வீட்டில் சிசிடிவி கேமரா ெபாருத்தி, அதை தனது செல்போனில் கண்காணித்து  வந்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது, வீட்டிற்குள் மர்ம நபர் நடமாட்டம் தெரிந்தது.

உடனே இதுபற்றி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தார். அதன்பேரில், ரோந்து போலீசார் சண்முகசுந்தர வள்ளி வீட்டிற்கு சென்று,  உள்ளே இருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில்  செங்கல்பட்டை சேர்ந்த முரளி (25) என்பதும், பூட்டிய வீடுகளை  நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது. மேலும், எந்த வீட்டின் முன்பு கோலம் போடவில்லையோ, எந்த வீட்டின் முன்பு தூசி  படிந்துள்ளதோ அந்த வீட்டில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்து இரவில் நுழைந்து கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது. அவனை கைது  செய்தனர்.

Related Stories: