சென்னை: போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தர வள்ளி (67), வீட்டில் தனியாக வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் அண்ணாநகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இவரது மகன் அருள்முருகன் அயர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், தாயின் பாதுகாப்பிற்காக வீட்டில் சிசிடிவி கேமரா ெபாருத்தி, அதை தனது செல்போனில் கண்காணித்து வந்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது, வீட்டிற்குள் மர்ம நபர் நடமாட்டம் தெரிந்தது.