முதல்வர் எடப்பாடி தாயார் படத்துக்கு வைகோ, திருமா, வீரமணி, நடிகர், நடிகைகள் அஞ்சலி

சென்னை: முதல்வர் எடப்பாடி தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு வைகோ, திருமாவளவன் மற்றும் நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையொட்டி நேற்று சென்னையில்  உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திக தலைவர் வீரமணி, துணை தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் இரா.முத்தரசன், நவாஸ் கனி எம்பி, நாகப்பட்டினம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, கடையநல்லூர் எம்எல்ஏ முகமது அபுபக்கர்,  தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், திரைப்பட நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயராஜ்குமார், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ்  கே.மிஸ்ரா ஆகியோரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்  வெள்ளையன், போர்ட்டிஸ் வடபழனி மருத்துவமனையின் மண்டல இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாண்டே, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின்  தலைவர் எஸ்.சீனிவாசன், அனைத்து ஜெயின் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள், வன்னியர் ஷத்ரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள், தமிழக தலைமை  அகமுடையார் சங்க நிர்வாகிகள், சென்னை மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை நிர்வாகிகள்,

திரைப்பட நடிகை குஷ்பு, திரைப்பட நடிகர்கள் பிரபு, எஸ்.வி.சேகர், ஜீவா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர்  ஆர்.கே.செல்வமணி, திரைப்பட இயக்குநர் ஆர்.பி.சௌந்திரி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் அபிராமி இராமநாதன்  மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தவுசாயம்மாளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, முதல்வருக்கு ஆறுதல்  கூறினர்.

Related Stories: