சென்னை: பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகளை டிஜிபி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். 1962ம் ஆண்டு இந்திய சீன போரின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி தமிழக காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நேற்று சென்னையில் உள்ள தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியின் போது உயிர்நீத்த 151 காவர்களை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மரக்கன்று ஒன்றையும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நட்டனர்.